0
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் இடம்பெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் நதீகா புஷ்பகுமாரி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
2013 க்குப் பின்னர் இலங்கை குத்துச்சண்டை வீரர் ஒருவர் ஆசிய மட்டத்தில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
இந் நிலையில் பதக்கம் வென்ற நதீகா புஷ்பகுமாரிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.