சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 491 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் காலக் கட்டத்தில் 55 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுததல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 76 636 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் உள்நுழைய முயன்ற 739 வாகனங்களில் பயணித்த 1072 நபர்களும் வெளியேற முயன்ற 742 வாகனங்களில் பயணித்த 1195 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.