ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய அரச உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு கடந்த செவ்வாய்க்கிழமை ஜெனீவா பயணமானது.
ஜெனீவாவில் இன்று திங்கட் கிழமை (12) மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருப்பதுடன் இதன்போது மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை வெளியிடப்பட்டு, இலங்கை குறித்த விவாதமும் இடம்பெறவுள்ளது.