0
என் ஞாபகப் பெருவெளியின்
தாவர மொழியாள் நீ
எழுதாத குறிப்புகளில்
ஒளிர்கிறாய்
உன் பச்சைரேகைகளின் பயணி
ஆழ்மன வேர்களில்
நீரள்ளிக் குடிக்கிறேன்
நூறு கிளை நீட்டி
ஆயிரம் பூப்பூத்து
இலட்சம் இலையசைத்தால்
உன்னழகில்
எங்கென அமரும்
இச் சிறுகுருவி
பழநிபாரதி