பதுளை – பண்டாரவளை நகரிலுள்ள 4 மாடிக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டது.
குறித்த 4 மாடிக் கட்டிடத்தில் விடுதியொன்று செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கும் பண்டாரவளை பொலிஸார், தீ காரணமாக கட்டிடம் முழுமையாக சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட தீ இவ்வாறு பரவியிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் இந்த தீ விபத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.