அ.தி.மு.கவின் செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதன்போது சட்டப் பேரவைத் தோ்தலை மையப்படுத்தி சில முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைமைக்கு வழங்குவது, தோ்தலில் பணியாற்றும் விதம் ஆகிய முக்கியமான அம்சங்கள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
கட்சியை வழிநடத்த 11 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது, முதல்வா் வேட்பாளா் ஆகியன தொடா்பாக அண்மையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சூடான விவாதங்கள் எழுந்தன. இன்றைய கூட்டத்திலும் இது குறித்த விவாதங்கள் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.