கிளிநொச்சி சென் அன்ரனி றோ.க. வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சையில் 100 வீத சித்தியை பெற்று சாதனை செய்துள்ளது.
அத்துடன் இப்பாடசாலையை சேர்ந்த ரா. அபிசான் 170 புள்ளிகளை பெற்று பாடசாலையில் முதன் நிலையில் சித்தி பெற்றுள்ளார்.
அத்துடன் 12 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுள்ளதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் 7 மாணவர்கள் சித்தி அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மிகவும் பின் தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள இப் பாடசாலையின் வெற்றி பயணத்தில் இது முக்கிய அடையாளமாக கருதப்படுகின்றது.
இதேவேளை இப் பாடசாலையின் கல்வி மேம்பாட்டிற்கு, லண்டனை சேர்ந்த தாமரை உதவும் கரங்கள் எனும் நிறுவனம் உதவியை வழங்கி வருகின்றமையை நன்றியுடன் நினைவு கூர்கின்றது பாடசாலைச் சமூகம்.