இன்று தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தனது பிறந்தநாளை தனது கணவர் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து மும்பை விமான நிலையத்தில் கொண்டாடிய வீடியோ வைரல் ஆகிவருகிறது.
லக்னோவில் உள்ள ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து இந்நாளை சிறப்பிக்க முடிவு செய்து லக்னோ புறப்பட்டார்.
அந்த வகையில், தனது கணவர் ரன்வீர் சிங்குடன் மும்பை விமான நிலையம் வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ரசிகர்கள் கொண்டுவந்திருந்த பிறந்த நாள் கேக்கை, தீபிகா வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.