தேவையான பொருட்கள்:
காடை – 4,
எலுமிச்சைசாறு – 2 ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 2 ஸ்பூன்,
தயிர் – 2 ஸ்பூன்,
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்க,
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த காடையை போட்டு அதனுடன் எலுமிச்சைசாறு, இஞ்சி, பூண்டுவிழுது, மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், தயிர், மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காடை துண்டை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும். சுவையான காடை வறுவல் தயார்.
நன்றி- தினகரன்