புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிதை | தீர்வாம் தேர்தலாம் | பா.உதயன்

கவிதை | தீர்வாம் தேர்தலாம் | பா.உதயன்

4 minutes read
 
கடைசி ஆயுதத்தையும்
ஐயா கையில
எடுத்துப் பார்த்தார்
சமரச அரசியலோடு
சமாதானம் வரும் என்று
சிங்கக் கோ(கொ)டியை
உயர்த்திப் பிடித்தார்
ஐயா பாவம்
இப்போ வெறும்
கையோடு நிற்கிறார்
அடுத்த தேர்தலைப் பார்த்தபடி
அது சரி
அவன் கொடுத்தா தானே
ஐயாவும் வேண்டித் தருவார்
சும்மா சொல்லுங்கோ ஐயா
தீபாவளிக்குள் தீர்வு
கிடைக்கும் என்று
பாவம் சனம் நம்பி வந்து
வாக்குப் போடும்
ஏமாந்தே பழகப்பட்ட
சனம் நாங்க ஐயா
இந்தியா வரும் என்றே
இருந்த சனங்க நாங்க ஐயா
ஆன அவனும் இவனும்
முழுசா தின்று முடிச்சான்
முள்ளிவாய்க்காலை ஐயா
இன்னும் ஒரு முறை
ஏமாறுவதில்
என்ன குறை ஐயா
புலிகள் போனால்
சமாதானம் வரும்
என்ற சனத்தையும்
சந்திச்சுப் பாருங்க ஐயா
மாற்று வழி ஏதும்
கேட்டுப் பாருங்கோவன்
மசியுமா சிங்களம் என்று.
பா.உதயன் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More