” அவளை
கண்களின் வழியாகவே
தேடிக்கொண்டிருக்கிறேன்
இதயத்தில் மரமாக
வளர்ந்திருப்பதை
மறந்து “
“எங்கேயும்
தேடியும்
மனதிற்குள்
அகப்படவில்லை
அவளின் தேடிய
தேடலின் முடிவு “
“எங்கே
அவள் என்று
கேட்கிறது உதடு
ஊமையாகவே
நிற்கிறது மனது “
“பழைய
தேடலிலே புதிய
தேவதையை
கண்டுகொண்டேன்
கண்ணுக்குள் கலங்கிய
நீர் வழிந்த முகத்திடலில் “
கவிஞர் : ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,