ஏன் நாற்றம் தாங்க முடியாமலா
தூர விலகிப் போகிறீர்
உயர் சாதி உங்கள் மலத்தை தான்
நாங்கள் கீழ் சாதி அள்ளிக்கொண்டிருக்கிறோம்
கவனமாக பார்த்து போங்கள்
உங்கள் மலக் குளியலை
தாண்டிப் போபவர்கள்
உங்கள் வெள்ளை வேட்டியில்
ஊத்தை ஒட்டிக் கொள்ளாமல்
காந்தியின் சத்திய சோதனையின்
இன்னும் ஒரு பக்கத்தில்
எழுதி வையுங்கள்
எங்கள் மலத்தை உண்ணக் கொடுதோம்
என்னைப் போலவே
மூக்கும் முழியுமாய்
பிறந்த இன்னும் ஒரு மனிதனுக்கு என்றே
மனங்களில் மலத்தை போல்
மனம் கொண்ட
உயர் சாதி உங்களுக்கு
தான் சொல்லுகிறேன்
சாதி இரண்டொழிய வேறில்லை
நினைவில் வையுங்கள்
காலம் ஒரு நாள்
மாறிப் போகலாம்
அப்போ நாம் உங்களுக்கு
உண்ணச் சோறும் குடிக்கத் தண்ணீரும்
தருவோம்
ஏன் எனில்
உன்னைப் போலவே
என்னையும் ஒரு தாய் தான்
பெத்துப் போட்டவள்.
பா.உதயன்