உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியில் நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பிற்கு எவ்வளவு அவசியம் உள்ளது என்பதை சொல்கிறது.
அத்தகைய உப்பை வைத்து கழுத்து பகுதியில் உள்ள கருமையை போக்க என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கல் உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
அலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்பே
பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் கருமையாக உள்ள அக்குள், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு 3 முறை பின்பற்றி வந்தால் கழுத்து பகுதியில் உள்ள கருமை படலம் நீங்குவதை நன்கு காணலாம்.
மேலும் ஒரு பௌலில் வெள்ளை நிற க்ளே பவுடரை போட்டு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவினால் கருமை நீங்கும்.
குறிப்பு
இதனை செய்யும் போது சூரியக்கதிர்கள் அதிகம் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் வெளியே செல்லும் போது சன் ஸ்க்ரீன் லோசனைத் தடவுங்கள்.