வடகொரியாவை ஆளும் கிம் ஜான் யுன் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கூட ஐந்தாவது அணுவாயத சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது வடகொரிய அரசு. உள்நாட்டு அரசியல் நடைமுறைகள் விதிமுறைகள் படி அமெரிக்காவும், தென் கொரியவும் வடகொரியா அணுவாயுத வளர்ச்சியில் ஈடுப்பட்டிருப்பதை தடுக்காது என அந்நாடு கருதுகிறது.
மேலும் முக்கிய ஆயுதமான முசுடன் ஏவுகணை என்னும் 4000 கிலோ மீட்டர் அளவு போகும் ஏவுகணையை வைத்து அமெரிக்காவின் குவாம் தாயகத்தை கூட தகர்க்க முடியும் என்பது முக்கிய விஷயமாகும்.
தற்போது கடுமையான ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வடகொரிய ராணுவத்தினர் சீக்கிரம் இந்த தாக்குதலுக்கு முழுவீச்சில் தயாராவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
வட கொரியத் தலைவர் அடுத்த ஆண்டுக்குள் அணு ஆயுத மேம்பாட்டை நிறைவு செய்யவிரும்புவதாகக் கூறியுள்ளார் கடந்த மே மாதம் அது குறித்து ஓர் ஆணையை அவர் நாடாளுமன்றத்தில் பிறப்பித்துள்ளார்.
தென் கொரியாவில் குடியேறிய வட கொரியாவின் உயர் அரசு அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.