Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அகதிகளை சிறைவைக்கும் ஆஸ்திரேலிய முகாம் மூடப்படுகிறது

அகதிகளை சிறைவைக்கும் ஆஸ்திரேலிய முகாம் மூடப்படுகிறது

1 minutes read

மெல்பேர்ன் மற்றும் சிட்னி உள்ளிட்ட இரு ஆஸ்திரேலிய நகரங்களில் செயல்பட்டு வந்த இரண்டு உயர் பாதுகாப்பு முகாம்கள் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளை சிறை வைக்கும் இந்த முகாம்களை மூடுவதன் மூலம் சுமார் 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மிச்சப்படுத்தப்படும் எனக் .கூறப்பட்டுள்ளது. மெல்பேர்னில் செயல்பட்டு வந்த தடுப்பு முகாம் இந்த வாரம் மூடப்பட்ட நிலையில், சிட்னியில் உள்ள தடுப்பு முகாம் விரைவில் மூடப்பட இருக்கிறது.

இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வந்த 9 முகாம்கள் மூடப்படுவது உறுதியாகியுள்ளது. படகு வழியாக வர முயற்சித்த தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்தியதில் கிடைத்த வெற்றியின் காரணமாக இந்த முகாம்கள் மூடப்படுவதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மேன் கூறியுள்ளார்.

அதேசமயம், முகாம்களை மூடும் அரசின் நடவடிக்கையை திசைதிருப்பும் செயல் என தொழிலாளர் கட்சி விமர்சித்திருக்கின்றது. இந்த முகாம் இரண்டு ஆண்டுகளுக்குள் மூடப்படும் என கடந்த மே 2016ல் முன்னாள் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உறுதியளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More