Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எனது கணவருக்கு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு – முகமட் சமியின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

எனது கணவருக்கு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு – முகமட் சமியின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

1 minutes read

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமட் சமி பல பாலியல்  தொழிலாளர்களுடன் தொடர்பிலிருந்தார் என அவரது மனைவி ஹாசின் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனது கணவரை அவர் பிளேபோய் என வர்ணித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. முகமது ஷமிக்கு ஹாசின் ஜஹான் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முகமது ஷமி மீது ஹாசின் ஜஹான் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகிறார்.

ஷமி வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாக காவல்நிலையத்தில் பாலியல் மற்றும் குடும்ப துஷ்பிரேயாக பிரிவுகளில் புகார் அளித்தார். ஆனால் ஹாசின் ஜஹானின் தொடர் புகார்களுக்கு முகமது ஷமி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் முகமது ஷமி – ஹாசின் ஜஹான் விவாகரத்து கோரிய வழக்கு கொல்கத்தா குடும்பநல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. 2018 ஆம் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஷமியின் மனைவி ஹாசின் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஷமி மீது பல்வேறு பரபரப்பு புகார்களை அடுக்கியுள்ளார். அவர் தனது மனுவில், கடந்த 4 ஆண்டுகளாக ஷமி மீதான கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என புகார் அளித்துள்ளார்.

அத்துடன், தனது கணவர் முகமது ஷமி தன்னிடம் வரதட்சனை கேட்டு மோசமாக கொடுமை செய்தார். பல பாலியல் தொழிலாளர்களிடம் கள்ள உறவு வைத்துக்கொண்டிருந்தார். இதற்காக தனியாக ஒரு மொபைல் போன் வைத்துக்கொண்டு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு உறவில் இருந்தார். கிரிக்கெட் விளையாட சக அணி வீரர்களுடன் பயணம் மேற்கொள்ளும் போது கூட இந்த உறவுகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டார் என ஹாசின் தனது மனுவில் புகார்களாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, முந்தைய வழக்கில் தன்னை பிரிந்திருக்கும் கணவர் ஷமி ஜீவனாம்சம் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன்படி, கொல்கத்தா நீதிமன்றம் முகமது ஷமி, பிரிந்த மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது. ரூ.1.30 லட்சத்தில் ரூ.50,000 ஹசின் ஜஹானின் தனிப்பட்ட ஜீவனாம்சமாகவும், மீதமுள்ள ரூ.80,000 அவருடன் தங்கியிருக்கும் மகளின் பராமரிப்புச் செலவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஜீவனாம்சம் தொகை தனக்கு திருப்திகரமாக இல்லை என ஹாசின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More