Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேருக்கு அமைச்சர் நேரில் அஞ்சலி.!

குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேருக்கு அமைச்சர் நேரில் அஞ்சலி.!

1 minutes read

தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி பகுதிகளுக்கு 54 பேர், தனியார் சுற்றுலா அமைப்பின் ஏற்பாட்டில் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து சுற்றுலா சென்று இருந்தனர்.

அவர்கள் பயணித்த பேருந்தானது நேற்று மாலை குன்னூர் மரப்பாலம் மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்த போது விபத்துக்குள்ளானது.

குன்னூர் மரப்பாலம் பத்தாவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு மீட்புபடையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கும், மேல் சிகிச்சைக்காக உதகை, கோவை மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விபத்து நடந்த குன்னூர் மரப்பாலம் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

விபத்து எவ்வாறு நடந்தது என்பது பற்றி அதிகாரியிடம் விசாரித்து தெரிந்துகொண்டார். பின்னர் சிகிச்சை பெற்று வருவோர்களை சந்திக்க குன்னூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்.

அங்கு விபத்தில் பலியாகி உயிரிழந்த 9 பேரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விபத்து குறித்தும், உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.

இந்த விபத்தில் 30 பேர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறிதளவு காயம் அல்லது காயம் இல்லாதவர்கள் 10 பேர் குன்னூர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More