இந்திய அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் அடைந்த படுதோல்விக்கு பிறகு தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமே தோன்றியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி கண்டது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் சொஹைலின் அதிரடியான பேட்டிங்கால் தான் அந்த அணி 308 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் அணியின் வீரர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர், மீடியாக்கள், சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதால் வீரர்களால் சரியாக தூங்க கூட முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.