Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கொவிட்-19: பெருவில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்தது

கொவிட்-19: பெருவில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்தது

1 minutes read

பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை, ஏழு இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் ஏழு இலட்சத்து 50 ஆயிரத்து 98பேர் பாதிப்படைந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பெருவில், இதுவரை 31ஆயிரத்து 146பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 698பேர் பாதிப்படைந்துள்ளனர். 95பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை ஒரு இலட்சத்து 24ஆயிரத்து 439பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்து 439பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை ஐந்து இலட்சத்து 94ஆயிரத்து 513பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More