ரஷ்யாவின் கடும் எதிர்ப்பையும் மீறி உக்ரைனில் இங்கிலாந்து விமானப்படையினர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு கிரீமியா, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பின்னர் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பகைமை நீடித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனுடன் போர் பயிற்சி நடத்துவதாக இங்கிலாந்து அறிவித்தற்கு ரஷ்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
எனினும் அதையும் மீறி இங்கிலாந்து விமானப்படையைச் சேர்ந்த 250 பெரசூட் வீரர்கள் வானிலிருந்து குதித்து உக்ரைனில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
சி 130 ஹெர்குலஸ் விமானத்தில் பறந்து சென்ற அவர்கள் சுமார் 600 அடி உயரத்தில் இருந்து குதித்து பயிற்சி மேற்கொண்டனர்.