இங்கிலாந்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (04) நடைபெற்று வருகின்றது.
வாக்குப்பதிவு இன்று இரவு 10 மணி வரை இடம்பெறும்.
230 உள்ளூராட்சி மன்றங்களில் சுமார் 8,000 கவுன்சிலர்கள் மற்றும் நான்கு மேயர் பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இத் தேர்தல் நடத்தப்படுகிறது.
வாக்காளர்கள், புகைப்பட அடையாள அட்டையை வாக்குச் சாவடிகளில் காட்ட வேண்டும். கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வேறு சில அடையாள அட்டைகளையும் இதற்காகப் பயன்படுத்தலாம்.
பாடசாலைகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோரை பராமரித்தல் மற்றும் சில வீதிகளில் உள்ள பள்ளங்களை சரி செய்தல் உள்ளிட்ட பல பொது சேவைகள் உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பாகும்.
இந்நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் தமது வளர்ப்பு நாய்களுடன் வருகை தந்த புகைப்படங்கள் #DogsAtPollingStations என்ற ஹேஸ்டேக் கீழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
படங்கள் – பிபிசி