லண்டனில் இன்று புதன்கிழமை முதல் புதிய வேலைநிறுத்தங்கள் நடைபெறுவதால் பயணிகள் இன்னும் அதிகமான பயண இடையூறுகளை சந்திக்க ஏற்பட்டுள்ளது.
சம்பளம் உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்து அஸ்லெஃப் ரயில் ஓட்டுநர்கள் சங்கம். இன்று மற்றும் ஜூன் 3 சனிக்கிழமை ஆகிய நாட்களில் பணி புறக்கணிப்பு செய்வதால், பல ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், RMTதொழிற்சங்கமும் ஜூன் 2 வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வேலைநிறுத்தங்கள் 15 ரயில் நிறுவனங்களின் சேவைகளைப் பாதிக்கும்.
அத்துடன், ரயில்கள் தாமதமாகத் தொடங்கி வழக்கத்தை விட மிகவும் முன்னதாகவே முடிவடையும் (காலை 7.30 முதல் மாலை 6.30 மணி வரை)
Aslef வேலைநிறுத்த நாட்களில், சுமார் 40% ரயில்கள் மட்டுமே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.