வடக்கு லண்டன் டவர் பிளாக்கின் படிக்கட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு தவித்த ஐந்து சிறுவர்கள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை பார்க்லேண்ட் வீதி, வூட் க்ரீனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது மாடி படிக்கட்டில் நிகழ்ந்த இந்தத் தீ விபத்தில் இரண்டு பெரியவர்களும் மீட்கப்பட்டனர்.
தீ விபத்து தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இருபத்தைந்து தீயணைப்பு வீரர்கள் ஐந்து மாடித் தொகுதிக்கு விரைந்தனர்.
சுவாசக் கருவியை அணிந்த தீயணைப்பு வீரர்கள், ஐந்து குழந்தைகளையும் இரண்டு பெரியவர்களையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
மதியம் 12.11 மணியளவில் படையணி அழைக்கப்பட்டு, 4.37 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
Hornsey, Kentish Town, Holloway மற்றும் Edmonton ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.