Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கல்லூரி மாணவி, தாய் மாமன் மகன் தற்கொலை!

கல்லூரி மாணவி, தாய் மாமன் மகன் தற்கொலை!

1 minutes read

ஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியானதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் அவருடைய தாய்மாமன் மகனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெய்வேலி அருகே இந்த சம்பவம் நடந்தது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அருகே உள்ள எ.குறவன்குப்பத்தை சேர்ந்தவர் நீலகண்டன்.

இவருடைய மகள் ராதிகா(22). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் ராதிகாவின் புகைப்படத்தை அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதிகா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில் துப்பட்டாவால் ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே பார்வதிபுரத்தை சேர்ந்த ராதிகாவின் தாய்மாமன் சேகரின் மகனான விக்னேஷ் (21) என்பவர், ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் விக்னேஷ், மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேணி பகுதியில் தோப்பில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட ராதிகாவும், அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி – pagetamil

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More