Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம்!

இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம்!

1 minutes read

ஏழு பேரின் விடுதலையில் இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாமென பேரறிவாளனின் தாயான அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 28 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

ஏழு பேர் விடுதலையில் மாநில உரிமையை பயன்படுத்த முடியாத ஒரு மாநிலத்தில் நான் வாழ்ந்து வருவது மிகவும் கவலையளிக்கின்றது.

இதேவேளை விடுதலை செய்ய முன்வராத யாரையும் தவறாக பேசக்கூடாதென பேரறிவாளன் என்னிடம் கூறியுள்ளார்.

தேர்தல் முடிந்தும் கூட  7 பேரை விடுவிக்காமல் அரசு அமைதியாக இருக்கின்றது.

இருப்பினும் எனது மகனை இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்.

ஆனால் நான் அமைதியாக இருக்க முடியாது. அதிகமாகவே ஏமாற்றமடைந்து விட்டேன்.

இனியும் எங்களை ஏமாற்றாமல் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அற்புதம்மாள்  உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.

நன்றி -vanninews

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More