முதலில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் வழக்கு தான் தமிழ் மொழியில் பதிவேற்றம் செய்து உச்சநீதிமன்றம் வெளியிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் மிகப்பெரும் ஆதரவு காணப்பட்டது.
அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கையை வரவேற்ற தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
மேலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பதிவேற்றத்தில் செம்மொழியான தமிழ் மொழி இடம் பெறாததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து தற்போது அதிகமான வழக்குகள் வரும் மொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். அடுத்த பட்டயலில் மற்ற மொழிகளையும் சேர்க்கப்படும். அதில் தமிழ் மொழி இடம் பெரும் என உச்சநீதிமன்றம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.