தேசிய அளவில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 63.45 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 2.38 சதவிகிதமாக மேலும் குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 801 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா சோதனைகளை செய்ய நாடு முழுதும் 897 அரசு ஆய்வகங்களும், 393 தனியார் ஆய்வகங்களும் செயல்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.