தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுத்தலுக்கு அமைய இ- பாஸ் நடைமுறை இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 7ஆம் கட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்களில் கடுமையான நடைமுறையாக இ – பாஸ் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் குறித்த இ – பாஸை வழங்குவதில் சில முறைக்கேடுகள் நடப்பதாகவும், மருத்துவம் மற்றும் திருமணம் ஆகிய தேவைகள் தவிர்த்து பிற தேவைகளுக்காக இ – பாஸ் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையில் இ – பாஸ் நடைமுறையை இரத்து செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் தமிழகத்தை பொருத்தவரையில் குறித்த சேவை நடைமுறையில் இருக்கும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து கட்டாய தேவைகளுக்காக ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கப்பெறும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.