இந்தியாவில் மேலும் 14 பேர் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவில் மரபணு ரீதியில் கொரோனா உருமாற்றம் பெற்று புதிதாக பரவியமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை முன்னெச்சரிக்கையாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இரத்து செய்துள்ளன.
மேலும் பிரித்தானியாவில் இருந்து இந்தியா திரும்பியோரை கண்டுபிடித்து அவர்களுக்கும் அவர்களோடு தொடர்பிலிருந்தோருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
பரிசோதனை முடிவுகளில் முன்னதாக இந்தியாவில் 6 பேருக்கு மரபணு மாற்ற புதிய வகை வீரியமிக்க கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் மேலும் 14 பேருக்கு தற்போது பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து புதிய வகை வீரியமிக்க கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.