திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியில் தமக்கு எதிராக சிலர் செயற்பட்டதாக கூறி அவர் இராஜினாமா செய்துள்ளதுடன் அமைச்சரவையில் இருந்து விலகிய மூன்றாவது அமைச்சர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இத்தனை கடுமையான ஒரு முடிவை எடுக்க நேரிடும் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 31 ஆம் திகதி ஹவுராவில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் அமித் ஷா முன்னில்லையில் ராஜிப் பானர்ஜி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே திரிணாமுல் காங்கிரசில் பெண் எம்.எல்.ஏ.வாக இருந்த வைஷாலி டால்மியாவை கட்சி நீக்கியுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் நேர்மை மற்றும் உண்மையாக இருப்பவர்களுக்கு இடம் கிடையாது என டால்மியா கூறியுள்ளார்.