முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டியில் விபத்தில் இளைஞர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
A 9 வீதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. சம்பவம் இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த இளைஞர் சாந்தபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என்பவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.