Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன

20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன

1 minutes read

அரசாங்கம் கொண்டுவந்துள்ள 20 ஆவது சட்டத்திருத்தம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எவ்வாறு அமையும் ன்பதை விளக்கியுள்ளார் அதன் தலைவர் சம்பந்தன்.

அதாவது ஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் வகையிலான முன்மொழிவுகளைக் கொண்டுள்ள இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை அதன் பாராளுமன்றக்குழுவிலேயே எடுக்கவுள்ளோம்.

20ஆம் திருத்தச்சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் விடுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பில் நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். குறிப்பாக ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் வகையிலான விடயங்கள் தொடர்பில் நாம் அதீத கவனம் செலுத்தியுள்ளோம்.

எனவே இந்த விடயத்தினை நாம் பக்குவமாக கையாள வேண்டியுள்ளது. ஜனநாயகத்தினை பாதுகாக்கும் அதேநேரம், எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆகவே 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எமது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக பாராளுமன்றக்குழு கூடவுள்ளது. எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் எமது உறுப்பினர்கள் அனைவரும் சமூகம் தரவுள்ளனர்.

அதன்போது நாம் இந்தக் கருமம் தொடர்பில் கவனம் செலுத்தி முடிவுகளை எடுக்கவுள்ளோம். பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை எமது பாராளுமன்றக்குழு கூடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன.

இதேவேளை இந்த விடயம் சம்பந்தமாக நாம் ஏனைய அரசியல் கட்சிகளுடனும், தலைவர்களுடனும் கலந்துரையாடவுள்ளோம். இந்த விடயத்தில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் ஆராயவுள்ளோம் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More