Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் கூடுகிறது

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் கூடுகிறது

1 minutes read

நாடாளுமன்றம் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

சபாநாயகர் அறிவிப்பு, மனுதாக்கல் உட்பட பிரதான சபை நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் விவாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் 2020 வருட நடுப்பகுதியில் அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கை என்பன குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், நாளைய தினம் உற்பத்தி வரிச் சட்டத்தின் கீழான ஒன்பது ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

நாளை மறுதினம் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆறு தீர்மானங்கள் என்பன விவாதிக்கப்படவுள்ளன.

அத்துடன், நாளை பிற்பகல் ஒரு மணி முதல் பிற்பகல் ஏழரை மணி வரையும், நாளை மறுதினம் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் ஏழரை மணிவரையும் அமர்வுகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன்தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் நடைபெறவுள்ளது.

அன்றையதினம் முற்பகல் 10.30 மணி முதல் 6.30 மணிவரை அமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இவ்விவாதத்தில் உரையாற்றவுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More