இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 02 பேர் இன்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 184பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த தொற்றிலிருந்து 2 ஆயிரத்து 946 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 63 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.