Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கப்பலின் கேப்டன் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

கப்பலின் கேப்டன் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

1 minutes read

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்டி நியூ டயமன்ட் கப்பலின் கேப்டன் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து அறிக்கையொன்றை பதிவுசெய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், பரிசோதனைகளுக்காக நியூ டயமன்ட் கப்பலிலுள்ள எண்ணெய் மாதிரியை பெற்றுக்கொள்ளுமாறு கடற் பாதுகாப்பு அதிகார சபைக்கு  கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இரண்டு தடவை தீப்பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தலைவர் உட்பட பணிக் குழாமினரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் காலிக்குச் சென்றிருந்ததுடன் விசாரணை அறிக்கையொன்றைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More