Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை

கிளிநொச்சியில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை

1 minutes read

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலக த்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலும் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது  என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது

 தியாகி திலீபனின் நினைவு  நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதேபோன்று இன்று(16-09-2020) கிளிநொச்சி அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  சென்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களிடம் நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார் .
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1304 /20 என்ற வழக்கின் பிரகாரம் 15 9 2020 தொடக்கம் 28.09.2020  வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வையும் அல்லது ஊர்வலங்கள் கூட்டங்கள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது மேற்படி கட்டளையை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜீவகஸ்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டளையை இன்று பகல் 11 30 மணியளவில் வழங்கியுள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More