2
கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடாத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதி பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பரிட்சையில் தோற்றியிருந்த 966 பேரின் பெறுபேறுகளே இவ்வாறு வௌியாகியுள்ளன.
குறித்த பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.