Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிரடியாக இரத்துச் செய்யப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

அதிரடியாக இரத்துச் செய்யப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

1 minutes read

எந்தவித எழுத்து ஆவணங்களும் இன்றி அரச காணிகளில் வசிக்கும் அல்லது அபிவிருத்தி செய்துள்ளவர்களுக்கு சட்டபூர்வ ஆவணங்களை வழங்குவதற்காக வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானியை காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம் ஹேரத் இரத்து செய்துள்ளார்.

காணி உரித்து வழங்குவதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் கடந்த 10 ஆம் திகதி வெளியாகியிருந்தது.

அரச கொள்கை பிரகடனத்திற்கமைய முதலீட்டு வாய்ப்புக்களை விஸ்தரித்தல், பால் மற்றும் தேசிய உணவு பயிர் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அதற்கு சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More