Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாணவர்களை அனுமதித்தல் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

மாணவர்களை அனுமதித்தல் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

1 minutes read

இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இடைநிலை வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் முறைமையை மறுசீரமைப்புக்குட்படுத்தும் காரணத்தினாலேயே இந்தத் திடீர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி மறு அறிவித்தல் வரும் வரையில் மாணவர்களை அனுமதிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கமைய தேசிய பாடசாலைகளில் முதலாம் வகுப்பு தவிர்ந்த மற்றைய வகுப்புகளுக்கு இடையில் புதிதாக மாணவர்களை சேர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More