Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

1 minutes read

அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறித்துள்ளது.

அதேநேரம், அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவிகளையோ, ஏனைய பதவிகளையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்பார்க்கவில்லை என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரசியமைமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குமா அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்துமா என எதிர்த்தரப்பினர் எதிர்பார்த்துள்ளனர்.

அரசியமைப்பின் 19ஆவது திருத்தம் சிறந்த பல இலக்குகளைக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 19ஆவது திருத்தம் நடைமுறையில் ஜனாதிபதி,

பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய முத்தரப்பினருக்குமிடையில் அதிகாரம் தொடர்பான நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

அரச தரப்பினருக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்போது அவை முழு அரசாங்கத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறான நிலை தோற்றம் பெறக்கூடாது என்பதற்காகவே 20ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது. திருத்தத்தில் காணப்படும் ஒரு சில குறைபாடுகள் நாடாளுமன்ற குழு ஊடாக திருத்தம் செய்யப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More