கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் 31வது சபை அமர்வு இன்றைய தினம் தவிசாளர் சி.கோணலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சென்ற கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைகள் வாசிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தலைமையுரையினை ஆற்றிய தவிசாளர் சபையினால் மேற்கொள்ளப்படும்,
நாளாந்த சேவைகள் இருக்கின்ற ஆளணியினரை வைத்துக்கொண்டு சிறப்பான முறையில் நடந்தேறுகின்றன. அவ்வப்போது ஏற்படுகின்ற சில பிரச்சினைகளை உறுப்பினர்களின் ஆலோசனைகளோடு சீர்செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
விசேடமாக அண்மையில் செங்கலடி பிரதேசத்தில் நடந்த சம்பவமான பௌத்த தேரரினால் அரச உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதினை கண்டித்து கண்டன அறிக்கையை முன்வைத்தார்.
அவ்வறிக்கையில் அவர் கூறியதாவது,
பௌத்தமதம் தர்மசீலக்கொள்கையுடன் திகழ்கின்றன. அம்மதத்தினை போதிக்கின்ற சில தேரர்களின் கடந்த கால செயற்பாடுகள் நாட்டில் பல பாரிய எதிர்ப்புகளை உருவாக்கியுள்ள நிலையில்,
சட்டங்களை மதித்து அரச நிருவாகக் கடமைகளில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்கள் தாக்கப்படுகின்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் அவர்களால் ஆற்றப்படுகின்ற மக்களுக்கான சேவைகளை எதிர்காலத்தில் நியாயமான முறையில் ஆற்றுவதற்கான சூழல் இல்லாமல் போயுள்ளதாக மக்கள் தமது ஆதங்கங்களை வெளியிடுகின்றனர் என்று கூறியதோடு இத்தகைய நிலை எமது பிரதேசத்தில் நடவாமல் இருப்பதற்கு அரச உத்தியோகத்தர்களுக்கு நாம் அரணாக செயற்பட வேண்டுமென்றும் என கண்டன அறிக்கையைச் சபையில் சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து மிகமுக்கியமான விடயமாக நாட்டிலே பேசுபொருளாக மாறியுள்ள 13வது அரசியல் அமைப்பு சம்பந்தமாக தவிசாளர் அவர்களின் முன்மொழிவு வைக்கப்பட்டு அதன் தார்ப்பரியங்களும் கூறப்பட்டன. இவ்விடயத்தினை ஒரு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டுமென உறுப்பினர் திரு.அ.அன்ரன் முன்மொழிய உறுப்பினர் ஜனாப் ரஹீம் மொகமட் வழிமொழிந்து தீர்மானம் நிறைவேற்ற பிரேரணையாக மாறியது. பின்பு தவிசாளரினால் இவ்விடயம் சம்பந்தமாக கருத்துக்களை சபையின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வுஆஏP காட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஜினித்திரராசா அவர்கள் இது ஆராய்ந்து முடிவெடுக்கும் அம்சமாக உள்ளதால் நாம் எதிர்ப்பை வெளியிடுகின்றோம் என்பதனைக்கூற ஏனைய வுஆஏP உறுப்பினர்களும் எதிர்ப்பதாக கூறியவுடன் ஏனைய உறுப்பினர்கள் வாக்கெடுப்பை நடத்துமாறு கூறினார்கள். இருப்பினும் மீண்டும் தவிசாளர் மாகாணசபை முறைமை பற்றி பல விடயங்களை தெளிவுபடுத்தி பல முன்வைப்புகளை முன்வைத்தார். இதனடிப்படையில் ஐனாப் ளு.ஆ. தாஹிர் நடுநிலை வகிக்க ஏனையவர்களால் 13வது அரசியல் அமைப்பு திருத்தவோ முற்றாக மாற்றவோ முடியாது எனவும் இந்த அரசமைப்பிலே உள்ள அனைத்து அதிகாரங்களையும் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.