Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான கோரவிபத்துக்கள்

நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான கோரவிபத்துக்கள்

1 minutes read

கொழும்பு-புத்தளம் பிரதான வீதியின் மாரவில-கல்பெம்ம சந்தியில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சாரதி கவனயீனமாக முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றதன் காரணமாக விபத்தின் போது குறித்த பெண் வெளியே வீசியெறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 37 வயதுடைய மற்றுமொரு பெண் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி-எம்பிலிபிடிய பிரதான வீதியில் பிபிலேகம-குறுக்கு வீதியின் ஊடாக செல்லும் சந்தியில் பாரவூர்தியொன்று துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் திபொல்கெடிய பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More