அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பில் 20 ஆவது திருத்தம் தொடர்பாக அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.
20 ஆவது திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் குழுக்களை நியமித்து ஆராய்ந்துள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
அமைச்சரவையிலும் ஆளும் கட்சி குழுக் கூட்டத்தின் போதும் இது தொடர்பில் ஆராயப்பட்டு, இறுதியில் அரசாங்கத்தின் நிலைப்பாடு நாட்டிற்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.