Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தொலைபேசி வாங்குவோருக்கு முக்கிய தகவல்

தொலைபேசி வாங்குவோருக்கு முக்கிய தகவல்

1 minutes read

TRCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசிகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, SIM அட்டையுடன் பயன்படுத்தப்படும் எந்தவொரு தொலைபேசி சாதனத்தையும், TRCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்திருத்தல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனிப்பட்ட நபர்களினால் பல்வேறு வழிகளிலும் நாட்டுக்குக் கொண்டுவரப்படும் இவ்வாறான உபகரணங்களை, TRCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பதிவு செய்யப்படாத SIM அட்டையுடன் பயன்படுத்தப்படும் தொலைபேசி சாதனங்களைக் கொள்வனவு செய்யும்போது, அவற்றை சேவை வழங்குநரின் ஊடாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிதாகக் கொள்வனவு செய்யும் தொலைபேசி சாதனத்தின் EMI இலக்கத்தை 1909 எனும் இலக்கத்துக்கு SMS அனுப்புவதன் மூலம், வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளமுடியும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More