0
கம்பஹா மாவட்டத்தில் யாருக்கேனும் காய்ச்சல் தொடர்பில் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று,
பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் எஸ். ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
திவுலப்பிட்டிய பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.