முல்லைத்தீவு கேப்பாபிலவில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தவர்களின் பிசிஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது 24 பேர் ஆக அதிகரித்துள்ளது.
கம்பகா மாவட்டம் மினுவாங்கொடை ஏற்பட்ட கொரோனா சமூக தொற்று காரணமாக அடையாளம் காணப்பட்ட 161 பேர் முல்லைத்தீவு கேப்பாபிலவில் அமைந்துள்ள 59-வது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த PCR பரிசோதனையின் முதற்கட்டமாக 4 பேர் இனங்காணப்பட்டுள்ளது தொடர்ந்து இன்றைய முடிவுகளின் படி 20 பேருக்கு தோற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது
மொத்தமாக 24 பேர் இவ்வாறு இனம்காணப்பட்டுள்ளார்கள் அனுராதபுரம் மருத்துவமனையில் பரிசோதனைகள் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஏனையவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்