ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (27ஆவது) தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2022 – 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக அவர் மீள தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஏற்கனவே கடந்த 2021 பெப்ரவரி 24 ஆம் திகதி இலங்கை சட்டத்தரனிகள் சங்கத்தின் 26 ஆவது தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக 2022 – 2023 ஆம் ஆண்டு தொடர்பில் சட்டத்தரணி இசுரு பாலபட்டபெந்தி தெரிவு செய்யப்ப்ட்டுள்ளார்.
இம்முறை, இலங்கை சட்டத்தரனிகள் சங்கத்தின் தேர்தல்கள் தொடர்பில், தெரிவத்தாட்சி அதிகாரியாக, சொலிசிட்டர் ஜெனரால் இந்திகா தேமுனி டி சில்வா செயற்பட்டார்.