Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காண்டா மிருகங்களின் எச்சங்கள் பரிசோதனை!

இலங்கையில் சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காண்டா மிருகங்களின் எச்சங்கள் பரிசோதனை!

1 minutes read

பதுளையில் மீட்கப்பட்ட இரண்டு காண்டா மிருகங்களினதும் எச்சங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விலங்கியல் நிபுணர் கெலும் நளிந்த மனமேந்திர ஆரச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் புதையல் தோண்டும் தொழிலாளர்களால் அவை மீட்கப்பட்டு அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

இதன்போது குறித்த இரண்டு காண்டா மிருகங்களின் பற்கள் மாத்திரம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதோடு அவை சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது தெரியவந்தது.

எவ்வாறாயினும் இதனை தொடர்ந்து குறித்த எச்சங்கள் அந்த சந்தர்ப்பத்தில் பெய்த கடும் மழை காரணமாக நீரில் மூழ்கியதோடு அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த எச்சங்கள் இன்னும் 62 அடிக்குக் கீழாக மண்ணுக்குள் புதைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த பகுதிகளில் அகழ்வு பணிகளை மேற்கொண்டு எச்சங்களை மீட்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More