தனிப்பட்ட நலன்களுக்காக பிரதமர் பதவியை ஏற்க விரும்பவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்கள் ஆணையுடனேயே அதனை ஏற்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, ஒரு நாடு என்ற ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்கள் ஆணையுடன் தீர்த்து வைப்பேன் என நம்புவதாக தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி விசுவாச கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதன் மூலம் மக்களின் போராட்டத்தின் துடிப்பை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.