பாராளுமன்றத்தின் 117 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, சபைக் குழுவில் பணியாற்றுவதற்காக சபாநாயகரை தவிசாளராகவும், பின்வரும் உறுப்பினர்களும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய ,ஏ. எல். எம். அதாஉல்லா, சந்திம வீரக்கொடி, பிரேமலால் ஜயசேக்கர, வீ. இராதாகிருஷ்ணன் சுதர்ஷினி
பெர்னாண்டோ புள்ளே, ஜே.சீ. அலவத்துவல, நிமல் லான்சா, பியல் நிசாந்த த சில்வா, ஜயந்த கெட்டகொட, சார்ள்ஸ் நிர்மலநாதன், ஜகத் குமார சுமித்ராரச்சி, கிங்ஸ் நெல்சன் முதிதா பிரிஸான்தி மர்ஜான் பளீல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.